Hot Posts

6/recent/ticker-posts

சுற்றுசுவருக்கான பூமி பூஜை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி சொலவம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள   பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்   2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிதியிலிருந்து ரூபாய் 6,00,000/- மதிப்பீட்டில் புதிய சுற்று சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இதற்கான


பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செ. தாமோதரன்  கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்  கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். உடன் மதுக்கரை ஒன்றிய செயலாளர் எட்டிமடை சண்முகம்,  மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா, மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கலாமணி வரதராஜ், சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னராஜ் (எ) செந்தில்குமார், சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், கிளைச் செயலாளர்கள் நஞ்சுண்ட மூர்த்தி, ராமகிருஷ்ணன், லோகநாதன்,

வடபுதூர் வரதராஜ், சிவலிங்கம், ஆனந்த், கருப்பம்பாளையம் செந்தில், இம்மிட்டிபாளையம் ஈஸ்வரன், சக்தி நகர் சிவக்குமார், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.